என் ஆழ்மனதில் கொட்டி கிடக்கும் சில பல எண்ணங்களை கொட்டி தீர்ப்பதற்காகவோ, எனக்கும் நேரம் போகவேண்டும் என்பதற்காகவோ, குறிப்பிட்டு சொல்ல எந்த ஒரு காரணம் இல்லாமலோ, வேட்டியே கட்டாவிட்டாலும் வரிந்து கட்டிக்கொண்டு நான் இப்பதிவகத்தை திறந்தேன். மாதங்கள் 2 ஓடின. அறிமுக பதிவை தவிர பதிவுகளே பிரசுரிக்கப்படவில்லை.
"வாடிக்கையாளர் சேவை! இதெல்லாம் எனக்கு தேவை!!" என்ற தலைப்பிலான என் பதிவிற்க்கான நிகழ்வு 2 மாதங்களுக்கு முன்பே நடந்தேறியது. முதலில் நான் "சற்று நாட்கள் முன்பு நான் வங்கி சேமிப்பு கணக்கு தொடங்க...." என்று தான் அப்பதிவை எழுத தொடங்கினேன். பின்னர் இன்ன பிற வெட்டி வேலைகளில் நான் முழு கவனம் செலுத்தியதால், அப்பதிவினை முடிக்க முடியவில்லை. மேலும் "சிறிது" தூய தமிழில் எழுத எனக்கு ஏனோ அறிவு பஞ்சம் வந்தது.
அப்பால, சுத்த தமிழ் எல்லாம் நமக்கு சரிபட்டு வராதுன்ட்டு, சும்மா பேச்சு தமிழ்லயே எழுத (உண்மையில டைப் பண்ணாலும்!) ஆரம்பிச்சி ஓவர் நைட்ல (அப்படி என்னடா நீ சாதிச்சுட்ட?!?!) அந்த மொக்கை பதிவை எழுதி முடிச்சேன். அது ஓரளவு தமிழே கிடையாது. இதுல, நம்ம நட்பு ஒருத்தர் அந்த பதிவை சீரியஸா எடுத்துட்டு நக்கீரன்(ர்) மாதிரி என் பதிவுல குத்தம் கண்டு புடிச்சாரு (கொஞ்சம் ஓவரா தான் போறமோ... போவோம்!!). இருந்தாலும், கால் காசுக்கு போறாத அந்த பதிவை படிச்ச அவரோட மன தைரியத்தை பாராட்டி இந்த பதிவை நான் அவருக்கு சமர்ப்பணம் பண்றேனுங்கோ...
பி.கு.: என் நண்பருக்காக முதல் ரெண்டு பாரா கொஞ்சம் சுத்த தமிழ்ல எழுத முயற்சி பண்ணேன்.
nanben da
ReplyDelete